வியாழன், 11 டிசம்பர், 2014

நல்லோர்க்கே சொர்க்கம்....!



 வாழ்க்கை என்பது சிறிதாகும் - அதில் 
வாழும் முறையோ பெரிதாகும் 
ஏழைக் கிரங்கி வாழ்வதுவே இனிய 
இஸ்லாம் தந்த நெறியாகும்....!

குடிசை வாழும் ஏழைகளும் - பெருங் 
கோடி சீமான் "ஹாஜி"களும் 
முடிவில் சமமாய் மண் மீது - நபி 
மொழிந்தவாறு "ஜனாஸா"வே....!

போட்டி பொறாமை புகு நெஞ்சம் - பெரும் 
பொல்லாப் பழிகள் உறை மஞ்சம் 
 "ஷைத்தான்கள்" - உடன் 
அகற்றி வாழல் அறமாகும்.....!

பெண்ணே வாழ்வின் கண்ணாகும் - அவள் 
பெருமையின் அளவோ விண்ணாகும் 
இன்னல் தன்னை அவர்க் கூட்டல் - உயர் 
இஸ்லாத்திற்கே முரணாகும்.....!

ஏழைப் பெண்ணைக் கரம்பிடிப்போன் - தூய 
இறையோன் கருணைதனைப் பெறுவான் 
நாளும் பொழுதும் அன்புடனே வாழும் 
நல்லோர்க் கென்றும் சுவர்க்கம் மெய்......!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக