செவ்வாய், 9 டிசம்பர், 2014

ஓர் ஒற்றைக் குயிலின் ஓலம்.....!



சோலையிலே ஓர் ஒற்றைக் குயில் 
சோகக் குரலிலே கூவுதடி 
மாலையிலும் அதிகாலையிலும் - அது 
வாடி மனம் வெந்து கூவுதடி.....!

சின்னஞ் சிறு பராயத்திலே 
சேர்ந்த துணை மறைந்தோடியது 
வண்ணக் கருங்குயில் தன்துணையை - கிட்டே 
வாவென்ற ழைத்துமே கூவுதடி.....!

கொஞ்சிக் கலந்துமே மாமரத்தில் 
கூடித் துளிர் கொய்து பாடியதும் 
நெஞ்சிற் கனவுகள் கூடிடவே - அன்று 
நித்தம் குளிர்ந்ததை எண்ணுதடி.....!

சோலையிலே பறந்தோடிய தும் 
சொர்க்கமென ஓன்று கூடியது 
பாலையருந்திப் பழஞ்சுவைத்தே - காதற் 
பாடலிசைத்ததைக் கூவுதடி.....!

சொந்த அனுபவம் யாவு மின்று 
சொப்பன மாகவே போன தெண்ணி 
வெந்து மிக நொந்து கூவுதடி - அதன் 
வேதனை என்று தான் தீருமடி......?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக