புதன், 3 டிசம்பர், 2014

அன்னை



பத்து மாதம் சுமந்தே என்னைப் 
பரிவுடன் வளர்த்தவள் அன்னை 
இத் தரை தன்னில் இவளருந் தியாகம் 
எழுந்தே தொட்டிடும் விண்ணை...!

கண்ணே என்று  இமையைப் போலவே 
காத்திருபால் இவள் நிதமே 
பொன்னே என்றும் பூவே என்றும் 
பொழியும் அன்போர் விதமே...!

ஈயொடெறும்பு எதுவும் அணுகா(து)
இனிதாய் வளர்த்த உள்ளம் 
தோயும் அன்புச் சுடராய் என்னைத் 
துலங்க வைத்தாள்! உய்வோம்!

பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே 
பான்பாய் அனுப்பி விடுவாள் 
வெள்ளி பூத்தே விடியும் வானாய் 
விளங்க அனைத்தும் இடுவாள்....!

பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப் 
பாரினில் துலங்க வைத்தாள் 
தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும் 
தூய உள்ளம் அன்னை....!

உதிரந் தன்னைப் பாலாய் உதிர்த்து 
ஊட்டி வளர்த்தவள் அன்னை 
இதயத் தரையில் வாழும் உள்ளம் 
இவளை மறவேன் மண்ணில்....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக